IMG 9705
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சண்டிலிப்பாயில் 9 குடும்பங்கள் பாதிப்பு!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்  உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே – 141 மற்றும் ஜே – 142  ஆகிய கிராம சேவகர் பிரிவு  பகுதிகளிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...