india sri lanka flags
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 7,000 கோடி கடன்!!

Share

இந்தியாவிடமிருந்து, இலங்கை சுமார் 7,000 கோடி ரூபா கடனாக பெற உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நோக்கத்துக்காக சுமார் 7000 கோடி கடன் இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

குறித்த கடன், உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதேவேளை, சீனாவிடம் இருந்து இன்னொரு கடனைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். குறித்த கடன் தொகை பிற நாடுகளிடம் பெற்றுள்ள கடன்களை திரும்பி செலுத்தவும், வர்த்தக உறவை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...