india sri lanka flags
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 7,000 கோடி கடன்!!

Share

இந்தியாவிடமிருந்து, இலங்கை சுமார் 7,000 கோடி ரூபா கடனாக பெற உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நோக்கத்துக்காக சுமார் 7000 கோடி கடன் இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

குறித்த கடன், உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதேவேளை, சீனாவிடம் இருந்து இன்னொரு கடனைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். குறித்த கடன் தொகை பிற நாடுகளிடம் பெற்றுள்ள கடன்களை திரும்பி செலுத்தவும், வர்த்தக உறவை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...