101308275 img 20180511 wa0024
செய்திகள்இந்தியா

தமிழக அகதிகள் முகாமிலிருந்து 65 பேர் மாயம்!

Share

இந்தியா – தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கைத் தமிழர்கள் 65 பேர் மாயமான நிலையில், படகில் கனடா நாட்டிற்குத் தப்பிச்சென்றார்களா என்பது தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா – தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த 65 பேரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை.

இது தொடர்பாக கியூ பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு விசைப்படகில் ஏறி தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கனடா நாட்டுக்குச் செல்லும் நோக்கத்துடன் படகில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை குறித்த இலங்கைத் தமிழர்கள் 65 பேரும் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் சிக்கித் தவிப்பதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை கியூ பிரிவு பொலிஸார் சேகரித்து வரும் அதேவேளை, இதற்காக இன்டர்போல் உதவியும் நாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...