sugar
செய்திகள்இலங்கை

5,000 டொன் சீனி துறைமுகத்தில் தேக்கம்!!!

Share

கொழும்பு துறைமுகத்தில் 5,000 டொன் சீனி சிக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சதொச நிறுவனத்தின் பிரதான அதிகாரியால் தாமத கட்டணம் செலுத்தி ஏற்பட்ட தாமதமே, தற்போது சீனித் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகும். தற்போது சதொச நிறுவனம் தலையிட்டு துறைமுகத்தில் தேங்கியுள்ள குறித்த சீனித் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சீனி தொகை நாளை அல்லது நாளைமறுதினம் விடுவிக்கப்படும் எனவும், அதன் பின்னர் அவை உரிய முறையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...