நாட்டில், நேற்றையதினம் மேலும் 4ஆயிரத்து 612 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 26 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 203 பேர் இன்றையதினம் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். அதன்படி, 3 லட்சத்து 57 ஆயிரத்து 598 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதேவேளை 59 ஆயிரத்து 796 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment