நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முதற்கட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
பதுளை மாவட்டம்: லுணுகலை, மீகஹகிவுல, வெலிமடை, கந்தகெட்டிய, ஹாலி எல, பதுளை, ஊவா பரணகம மற்றும் பஸ்ஸறை.
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ, உக்குவெல, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை மற்றும் லக்கல பல்லேகம.
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை, மதுரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த.
கண்டி மாவட்டம்: உடுதும்பர.
தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல் அல்லது கட்டிடங்களில் திடீர் வெடிப்புகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மலைச் சரிவுகளுக்கு அருகில் வசிப்போர் இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.