corona virus
செய்திகள்இலங்கை

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் உயிரிழப்பு !

Share

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் முதல் நேற்று (24) வரையான காலத்தில் வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 401 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (25) சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைப்படி
வவுனியா மாவட்டத்தில் நேற்று(24) 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு நேற்றைய தினம் (24) யாழ் மாவட்டத்தில் ஐவரும் , வவுனியா மாவட்டத்தில் இருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வட மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 719 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...