WhatsApp Image 2022 03 09 at 1.35.03 PM
செய்திகள்இலங்கை

உக்ரைனை விட்டு வெளியேற 27 இலங்கையர்கள் மறுப்பு!

Share

உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்தனர். மாணவர்கள் தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.

போலந்து, ருமேனியா, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கான அனைத்து வசதிகளையும் எமது தூதரகம் செய்து கொடுத்துள்ளது.

தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது எனத் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் சிலர் தொழில் செய்கின்றனர். மேலும், சிலர் குடும்பமாக வாழ்கின்றனர்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...

18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...