IMG 20220302 WA0041
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள்! – வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Share

பிரதேச அபிவிருத்திகளின் போது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுப்பதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்குமாக யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் அனைவரும் இணைந்து பேசி விரைவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சுன்னாகம் பிரதேச சபையின் தவிசாளர் கே.தர்சன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளால் பிரதேச சபையை மையப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளர் முகுந்தனுடன் கலந்துரையாடல் ஒன்னை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரரிவித்திருந்தார்.

கடந்த வாரம் இடம்பெற்ற வலி. தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போது பிரதேசத்தின் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இடையூறாக உள்ளதாகவும் அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அதிகளவான உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக வட்டாரத்துக்கு நான்கு மில்லியன் முன்மொழிவுகளை அரியல் நுழைவு இன்றின் வட்டாரத்தின் பிரதிநிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது யாழ்ப்பாணத்தில் மட்டும் மாவட்ட ஒருங்கிணைப்பு முழுவின் முடியாக இருப்பதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த திட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று பிரதேச செயலருக்கு சுட்டிக்காட்டியிருந்த உறுப்பினர்கள், ஆனால் இவ்வாறான தன்னிச்சையான நடைமுறை யாழ்ப்பாணத்தில் மட்டும் இருப்பதாகவும் இவ்வாறான நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த உறுப்பினர்களது கருத்துக்களை செவிமடுத்திருந்த வலி தெற்கு பிரதேச செயலாளர் இது தொடர்பில் தான் துறைசார் தரப்பினருக்கு தெரியப்படுத்துவதாகவும் தற்போது குறித்த திட்டங்களுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின்போது வலி தெற்கு பிரதேச சபையை அங்கத்துவம் செய்யும் கட்சிகளுள் ஶ்ரீலங்கா சதந்திர கட்சியை தவிர்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...