Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

சில பகுதிகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு! – கூறுகிறார் நிதி அமைச்சர்

Share

நாட்டில் மூன்று மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது. மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தரவுகள் இல்லை. இருப்பினும் சுங்க திணைக்களம் மற்றும் மொத்த வியாபாரிகள் போன்றோர் தரவுகள் அடிப்படையில், நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன.

ஒரு சில பொருட்களுக்கு சில பகுதிகளில் தட்டுப்பாடு காணப்படலாம். இதேவேளை சந்தையில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யாது பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...