செய்திகள்
நெருக்கடியில் நாடு! – பங்காளிக் கட்சிகளால் தீர்வுத் திட்டம்
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி யோசனைகள் அடங்கிய தீர்வு திட்டம் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளன.
அமைச்சர்களான விமல்வீரசன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
You must be logged in to post a comment Login