VideoCapture 20220125 085008 1
செய்திகள்இந்தியாஇலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

அண்மையில், இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்றையதினம் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைதான குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீனவர்கள் அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

VideoCapture 20220125 084959 1

இதேவேளை, அவர்களது கைவிரல் அடையாளங்களும் பதிவுசெய்யப்பட்டன. அத்துடன் அவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைதானவர்களில் ஒருவர் அவர்கள் வந்த படகொன்றின் உரிமையாளர் என்பதால் குறித்த நபரின் படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஏனைய 7 படகுகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...