vijaya
செய்திகள்அரசியல்இலங்கை

விஜயதாசவுக்கு எதிராக நடவடிக்கை! – ஆளுங்கட்சி கோரிக்கை

Share

2022 நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பை புறக்கணித்த ஆளுங்கட்சி எம்.பி. விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன. 60 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்களில் மூவர் ஆளுங்கட்சியினர். இதில் இருவர் முன்கூட்டியே சமூகமளிக்கமாட்டோம் என்பதை அறிவித்துள்ளனர். எனினும், விஜயதாச ராஜபக்ச வாக்கெடுப்பை புறக்கணித்தார்.

எனவே, இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 92
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த வாரத்தில் மட்டும் 49 பேர் சாலை விபத்துகளில் பலி: போதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம்...

world 94
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: முதல் கட்டம் நிறைவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா...

world 93
செய்திகள்உலகம்

சவூதிக்கு போர் விமானங்களை அனுப்பியது பாகிஸ்தான்: எரிசக்தி தளங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்...

world 90
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து நிலையச் சொத்துக்களைச் சேதப்படுத்திய நபர் கைது: ஏப்ரல் 17 வரை விளக்கமறியல்!

கொழும்பு, பெட்டாவில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்,...