school072446
செய்திகள்உலகம்

பாடசாலையில் தீ -26 மாணவர்கள் சாவு!

Share

பாடசாலை ஒன்றில் தீ விபத்து காரணமாக 26 மாணவர்கள் சாவடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ளபாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான மாரடியில் அமைந்துள்ள பாடசாலையில் கடந்த திங்கள் கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வைக்கோல் கூரை வேயப்பட்ட 3பாலர் வகுப்புகள் மற்றும் ஆரம்ப வகுப்புகள் தீக்கிரையாகின. இதில், 3 முதல் 8 வயது வரை கொண்ட 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர் .

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நைஜா் பாடசாலைகளில் மாணவா்களுக்குப் போதிய இடம் இல்லாததால், தற்காலிகமாக வைக்கோல் கூரைகளைக் கொண்டு வகுப்புகள் அமைக்கப்படுகின்றன.

தலைநகா் நியாமேவின் புகா்ப் பகுதியிலுள்ள ஒரு பாசாலையின் தற்காலிக வகுப்புகளில் கடந்த சித்திரை மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவா்கள் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...

25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...