rain 1
செய்திகள்இந்தியா

அரச அலுவலகங்களுக்கு விடுமுறை!

Share

சென்னையில் அரச அலுவலங்களுக்கு  இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

இதனால், வீதிகள் அனைத்தும் வெள்ளம் நிறைந்து வழிகின்றன.

இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மழை பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் இல்லையாயின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ்நாட்டில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...