t20 scaled
செய்திகள்விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் மோதும் ரி-20 போட்டி: யார், யார் பார்க்கலாம்?

Share

ரி-20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள குறித்த ரி-20 போட்டியைப் பார்வையிடுவதற்காக, 70 சத வீத இரசிகர்களுக்கு, ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியானது, தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றிருந்தது.இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள குறித்த போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வெற்றிகொண்டுள்ளன.

இந்நிலையில் 7ஆவது தடவையாக ரி-20 போட்டியை, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடாத்தத் தீர்மானித்திருந்த நிலையில், கொரோனா இடரினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில், ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியைப் பார்வையிட 70 வீதமான இரசிகர்களுக்கு அனுமதி வழங்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...