178818 vaccine
செய்திகள்இலங்கை

சிறுவர்களுக்கு தடுப்பூசி! – இன்றுமுதல் ஆரம்பம்

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (24) முதல் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது .

இன்றையதினம் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்

இதன்படி,  தடுப்பூசி முதலில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான தெளிவூட்டல் மற்றும் எழுத்துமூல அனுமதி குழந்தையின் பாதுகாவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

எவ்வாறாயினும், பாதுகாவலர்களுடைய அனுமதியின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படமாட்டாது. ஏற்கெனவே பல தாய்மார் தம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை நாள்களிலும் இதேபோன்றே தடுப்பூசி வழங்கப்படும். தம்மிடம் தடுப்பூசி ஏற்ற வரும் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் திகதியை விசேட வைத்திய நிபுணர் குழந்தைகளின் பாதுகாவலருக்கு தெரியப்படுத்துவார் – எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...