178818 vaccine
செய்திகள்இலங்கை

சிறுவர்களுக்கு தடுப்பூசி! – இன்றுமுதல் ஆரம்பம்

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (24) முதல் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது .

இன்றையதினம் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்

இதன்படி,  தடுப்பூசி முதலில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான தெளிவூட்டல் மற்றும் எழுத்துமூல அனுமதி குழந்தையின் பாதுகாவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

எவ்வாறாயினும், பாதுகாவலர்களுடைய அனுமதியின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படமாட்டாது. ஏற்கெனவே பல தாய்மார் தம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை நாள்களிலும் இதேபோன்றே தடுப்பூசி வழங்கப்படும். தம்மிடம் தடுப்பூசி ஏற்ற வரும் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் திகதியை விசேட வைத்திய நிபுணர் குழந்தைகளின் பாதுகாவலருக்கு தெரியப்படுத்துவார் – எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
received 3346662718994367
செய்திகள்இலங்கை

விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிக்கு இராணுவத்தினர் இடையூறு – நிர்வாகத்தினர் கோரிக்கை

முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக...

25 68fe267ebcb42
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்றும் சதி: சந்தேகம் எழுப்பும் யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும்...

1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...