Bandula Gunawardena
செய்திகள்இலங்கை

அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

Share

அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு அரிசி ஆலையின் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலையை அதிகரிக்க அரசாங்கத்தால் இடமளிக்க முடியாது.

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

நிர்ணய விலைக்கு எதிராக அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வதெற்கென 6 களஞ்சியசாலைகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்சம் மெற்றிக் தொன் நெல் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

அத்துடன், கொரோனாத் தொற்று பரவலால், உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கிப்போயுள்ளதால் பொருள்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...