arrest 1
செய்திகள்இலங்கை

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 110 பேர் கைது!

Share

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 80,055 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்நுழையும் , வெளியேறும் பகுதிகளில் பயணித்த 2,596 பேரும், 1,718 வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 99 பேரும் , 52 வாகனங்களும் திருப்பி அனுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க தொற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழு அனுமதியளிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...