image c41642f730 1
செய்திகள்இலங்கை

வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி

Share

வடக்கில் 100,000 பேர் தடுப்பூசி போடவில்லை – வைத்திய கலாநிதி

வடமாகாணத்தில் 30 வயதுக்கு அதிகமானவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணத்தில் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி முதல் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 32 ஆயிரத்து 844 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் ஓகஸ்ட் மாதத்திலும், 5 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் செப்டெம்பர் மாத முதல் 12 நாள்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 228 இறப்புகள் ஓகஸ்ட் மாதத்திலும் 169 இறப்புக்கள் செப்ரெம்பர் மாத முதல் 12 நாள்களிலும் இடம்பெற்றுள்ளன.

வடமாகாணத்தில் பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலே இறப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மக்கள் விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

bts pictures 0ynzwrpbewd63qlf
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...