3dd5df09 b234c6f6 5f57cc49 067ea9f8 tourist
செய்திகள்இலங்கை

நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!!

Share

நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!!

நாளாந்தம் ஆயிரம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாளாந்தம் 250 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை தருகின்றனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர்.சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

சுகாதார அமைச்சால் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்துமிக்க நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும். நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், காப்புறுதி பெற்றிருத்தல் அவசியமாவதுடன், பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், அவர்களுக்கு வௌியே செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தடுப்பூசிகளை பெறாதவர்கள் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக புராதன இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட 22 சுற்றுலாத்தலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...