1735875275 matara prison 6
செய்திகள்இலங்கை

விடுதலையாக இன்னும் 5 நாட்களே இருந்த நிலையில் விபரீதம்: மாத்தறையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து கைதி தப்பியோட்டம்!

Share

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை, குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இவர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

எப்போது நிகழ்ந்தது? கடந்த வியாழக்கிழமை (29) மாலை, சிறைச்சாலை கண்காணிப்பாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே அவர் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கைதி தனது நன்னடத்தை காரணமாக வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி (சுதந்திர தினம்) விடுவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் எனச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக விடுதலையாகவிருந்த நிலையில், அவர் தப்பியோடியமை அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய கைதியைக் கண்டுபிடிப்பதற்காக மாத்தறை மற்றும் பாணந்துறை பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...