யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடானது வேகமடைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளருமான மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான இன்பம் தெரிவித்தார்.
காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு இன்று (09) யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
பாதுகாப்புத் தரப்பினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. பொதுமக்களின் காணிகள் திட்டமிட்டுத்தான் கபளீகரம் செய்யப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.