articles2Fv9KiOKnKD5iVuoS2PJSS
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு விவாதத்தை உடனே ஆரம்பியுங்கள் – அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம்!

Share

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான தேசிய அளவிலான கலந்துரையாடலை அரசாங்கம் உடனடியாக ஆரம்பித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One Text Initiative அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்த போதிலும், புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது. ஜே.வி.பி அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தனது உண்மையான நிலைப்பாட்டை எப்போதும் மறைத்தே வந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பெரும்பான்மைவாத அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம். கடந்த தேர்தல்களில் வாக்குறுதி அளித்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தற்போது இதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்தார்.

வருங்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு நிலையான அரசியலமைப்பு அவசியம். அதற்கு அரசாங்கத்தின் ஈடுபாடு மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க புதிய அரசியலமைப்பு உதவ வேண்டும். அரசாங்கத்தின் பங்களிப்பு இன்றி அர்த்தமுள்ள சீர்திருத்தத்தை எட்ட முடியாது எனத் தெரிவித்தார்.

ஒற்றை அரசியல் கட்சியின் நலனுக்காக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒருபோதும் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாது. சந்திரிகா, ரணில் மற்றும் கோட்டாபய ஆகியோரின் காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகள் தோல்வியடைந்ததற்கு இதுவே காரணம். அரசாங்கத்தின் சித்தாந்தம் முழு நாட்டினதும் சித்தாந்தமாக இருக்க முடியாது” எனவும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...