covid 1
செய்திகள்இலங்கை

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

Share

நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய

அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய வலியுறுத்தியுள்ளார்.

விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து நாட்டை முடக்கினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புஞ்சிபொரளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இன்னமும் எத்தனை சடலங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை பற்றிய பொய்யான தகவல்களை வழங்கி, புள்ளிவிவரங்களில் மோசடி செய்யும் அரசாங்கம், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெய்யான கரிசை காட்டுமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...