1616843907595
செய்திகள்இலங்கை

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

Share

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றை காரணம் காட்டி நாடு முடக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்துடன் அன்றாடம் தொழில் செய்து வாழ்வோர் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

நாடு முழுமையாக முடக்கப்படாவிடினும், மக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விதிக்கப்படும் தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...

07 1
செய்திகள்உலகம்

மொஸ்கோவில் அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி; உக்ரைன் போர் ஆண்டு நிறைவில் பதற்றம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள சவ்யோலேவ்ஸ்கி (Savyolovsky) தொடருந்து நிலையம் அருகே, நள்ளிரவு வேளையில் நடத்தப்பட்ட...

06 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், இரத்தினங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய...