127533494 slppmeeting001 1
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதத்தை ஜனாதிபதி செயலில் காட்ட வேண்டும்- வடக்கு-கிழக்கு கரிநாள் போராட்டத்திற்கு SLPP கடும் எதிர்ப்பு!

Share

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘கரிநாள்’ அனுஷ்டிக்கப்பட்டு பேரணிகள் நடத்தப்பட்டமைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், சுதந்திர தினத்தன்று வடக்கு-கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றி, கரிநாள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இது இனவாதம் தூண்டப்படுவதையே காட்டுகிறது. ஜனாதிபதி தனது பேச்சைச் செயலில் காட்ட வேண்டும் என இந்திக்க அனுருத்த வலியுறுத்தினார்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐ.டி (FCID) க்கும், நாமல் ராஜபக்சவை சி.ஐ.டி (CID) க்கும் அழைத்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் வேட்டை என அவர் சாடினார். அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையை மறைக்கவே ராஜபக்சக்களைக் குறிவைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

படையினர் உயிர்த்தியாகம் செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது. ஆனால், இந்த அரசாங்கம் படையினரின் சேவையை ‘டித்வா’ புயல் பாதுகாப்புடன் மட்டும் மட்டுப்படுத்த முயல்வது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், தேசத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படும் பிரிவினைவாத மற்றும் இனவாதச் செயற்பாடுகளைத் தடுக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...