வாடிவாசல் படப்பிடிப்பு! – திருவனந்தபுரத்தில் சூர்யா

New Project2 2

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சில வாரங்களுக்கு முன்னரே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது.

உண்மையான ஜல்லிக்கட்டு மைதானம் போன்று செட் உருவாக்கப்பட்டு உண்மையான ஜல்லிக்கட்டு வீரர்களுடன், சூர்யா கலைகளை அடக்கும் படப்பிடிப்பு ஒத்திகை அண்மையில் நடத்தப்பட்டது. இந்த படப்பிடிப்பு தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானமை அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஒத்திகை, திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா திருவனந்தபுரம் சென்றுள்ளார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கி வரும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் ஒரு படமாக அமையும் என்று பலராலும் எதிர்பாக்கப்படுகிறது.

#Cinema

Exit mobile version