நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது படப்பிடிப்பு இடம்பெற்று வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’
இயக்குநர் பாண்டிராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் முதற் கண்ணோட்டம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது, சூர்யாவின் ரசிகர்கள் திரைப்பட வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் வினய் ஒரு நேர்காணலில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் குறித்து பேசும்போது ,எதிர்வரும் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என கூறியுள்ளார்.
நடிகர் வினய் வெளியிட்ட கருத்து சூர்யாவின் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
Leave a comment