1995 ஆம் ஆண்டு வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவரது பதிவில்,
நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
#CinemaNews