tamilni 1 scaled
சினிமாசெய்திகள்

இறக்கும் நாள் அப்படி எல்லாம் நடந்தது, திடீரென ஏற்பட்ட இறப்பு- சீரியல் நடிகை சங்கீதா எமோஷ்னல்

Share

இறக்கும் நாள் அப்படி எல்லாம் நடந்தது, திடீரென ஏற்பட்ட இறப்பு- சீரியல் நடிகை சங்கீதா எமோஷ்னல்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்குபவர் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் அறிமுகமானவர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.

மைசூரில் இருவருக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது, புகைப்படங்கள் வெளியாக என்னது இவர்கள் காதலித்தார்களா என கமெண்ட் செய்து வந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு பல விமர்சனங்களை எதிர்க்கொண்ட சங்கீதா அண்மையில் தனது வாழ்க்கையில் சந்தித்த சோகமான விஷயம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அப்பாவிற்கு அன்று மார்பு வலி இருந்து இருக்கு ஆனால் அவர் வெளியே சொல்லவில்லை.

நானும் அம்மாவும் வெளியில் கிளம்பியதால் தண்ணீர் பாட்டில் பேக்கை கையில் எடுத்துக்கொடுத்து டாடா காட்டி அனுப்பி வைத்தார், நாங்களும் கிளம்பிவிட்டோம். அப்போது புது கார் பிரச்சனை செய்ததால் இரண்டு நிமிடத்தில் திரும்பிவந்து வேறு ஒரு கார் எடுத்துக்கொண்டு சென்றோம்.

நாங்கள் வெளியில் போகாமல் இருக்க இப்படி எல்லாம் நடந்தது. ஆனால் நாங்கள் சென்ற பிறகு தான் அப்பாவிற்கு வலி அதிகமாகி வீட்டிற்கு வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

அப்பாவின் இடத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அந்த இடத்தை என்னால் சரி செய்ய முடியவில்லை, கல்யாணத்திற்கு அப்பா இல்லாதது எனக்கு வருத்தம் தான் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...