tamilni scaled
சினிமாசெய்திகள்

தனது ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் கேமியோ ரோலில் வந்த சூர்யா.. வெறித்தனமான ட்ரைலர்

Share

தனது ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் கேமியோ ரோலில் வந்த சூர்யா.. வெறித்தனமான ட்ரைலர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் சூரரைப் போற்று.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்ததால் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது. தமிழில் நேரடியாக ஓடிடி-யில் வந்திருந்தாலும், தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ள இப்படம் திரையரங்கங்களில் வெளிவரவுள்ளது.

ஆம், தமிழில் சூர்யா ஹீரோவாக நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து Sarfira எனும் தலைப்பில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தையும் சுத்த கொங்கரா தான் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளிவந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்த காட்சியும் Sarfira ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழில் நடிகர் மோகன் பாபு நடித்திருந்த கதாபாத்திரத்தில் இந்தியில் சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....