5 3 scaled
சினிமாசெய்திகள்

அந்த விஷயத்திற்காக ரஜினியிடம் அடம் பிடித்த பிரபல நடிகை.. இன்று வரை கோபத்தில் இருக்கிறாராம்

Share

அந்த விஷயத்திற்காக ரஜினியிடம் அடம் பிடித்த பிரபல நடிகை.. இன்று வரை கோபத்தில் இருக்கிறாராம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நட்சத்திரம் ஆவார். இவர் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் மற்றும் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள் வந்துள்ளது. அதில் ஒன்று தான் படையப்பா.

இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளை கடந்துள்ளது. உலகளவில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்த படையப்பா படத்தின் கதையை, நடிகை மீனாவிடம் ஒரு முறை கூறியுள்ளாராம் ரஜினிகாந்த். அவருக்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கிறது என்ற காரணத்தினால் இப்படி செய்துள்ளார். கதையை கேட்ட நடிகை மீனா ‘நான் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்’ என கூறினாராம்.

ஆனால், ரஜினிகாந்த் ‘அது வில்லி கதாபாத்திரம், உங்க இன்னசண்ட் முகத்திற்கு செட் ஆகாது மீனா. நீங்க வேணும்னா ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிங்க’ என கூறிவிட்டாராம். ரஜினிகாந்த் சொல்லியும் கேட்காமல் நீலாம்பரி கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என அடம்பிடித்துள்ளாராம்.

அதன்பின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேசி புரியவைத்துள்ளார். பின் அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அந்த கதாபாத்திரம் தனக்கு கொடுக்கவில்லை என, என் மீது இன்று வரை மீனாவிற்கு கோபம் இருக்கிறது என்று விழா மேடை ஒன்றில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...