harsh jain
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு!

Share

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டோர், புதிய வேலையை தேடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் H1B விசா வைத்திருப்பவர்கள் நிலைமை சற்று கடினமாகி இருக்கிறது. ஏனெனில், பணிநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து சரியாக 60 நாட்களில் வேறு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர வேண்டும்.

இவ்வாறு பணியில் சேராத பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர். இது போன்ற இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு டிரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின், இந்தியர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இவர் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக பணி வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் தனது நிறுவனம் சிறந்த திறமைசாலிகள், டிசைன், பிராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பிரிவுகளில் நல்ல அனுபவம் மிக்கவர்களை தேடி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதோடு தனது நிறுவனம் பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நல்ல நிதி நிலைமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“2022 ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியர்கள் மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு திரும்ப நினைவூட்டும் செய்தியை பரப்புங்கள். இவ்வாறு செய்யும் போது இந்திய தொழில்நுட்பங்கள் அடுத்த தசாப்தத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என்பதை உணர செய்ய முடியும்,” என ஹர்ஷ் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

#technology

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...