harsh jain
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு!

Share

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டோர், புதிய வேலையை தேடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் H1B விசா வைத்திருப்பவர்கள் நிலைமை சற்று கடினமாகி இருக்கிறது. ஏனெனில், பணிநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து சரியாக 60 நாட்களில் வேறு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர வேண்டும்.

இவ்வாறு பணியில் சேராத பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர். இது போன்ற இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு டிரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின், இந்தியர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இவர் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக பணி வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் தனது நிறுவனம் சிறந்த திறமைசாலிகள், டிசைன், பிராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பிரிவுகளில் நல்ல அனுபவம் மிக்கவர்களை தேடி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதோடு தனது நிறுவனம் பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நல்ல நிதி நிலைமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“2022 ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியர்கள் மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு திரும்ப நினைவூட்டும் செய்தியை பரப்புங்கள். இவ்வாறு செய்யும் போது இந்திய தொழில்நுட்பங்கள் அடுத்த தசாப்தத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என்பதை உணர செய்ய முடியும்,” என ஹர்ஷ் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

#technology

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...