21 614463488648d
செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்! – நீதி வேண்டி யாழில் போராட்டம்

Share

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்தநபர் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபரின் உறவினர்கள் இறுதிக் கிரியை ஒன்றில் அவர் கலந்துகொண்டார் எனவும், அங்கு அவருடன் சிலர் முரண்பட்டனர் எனவும், அவர்களே அவரை கொலை செய்தனர் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

எனவே குறித்த மரணம் கொலை எனவும், கொலை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

21 61446348aa1e6 21 61446348c6311 21 614463484c957 21 614463485f316 21 6144634831b4c

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...