tamilni 197 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி

Share

கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய போது விபத்துக்குள்ளான மாணவன் பொலிஸ் உத்தியோகத்தரின் உடனடி தலையீட்டினால் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவனே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்திற்கு வந்து முதல் வினாத்தாள் விடைகளை எழுதி முடித்திருந்தார்.

இடைவேளையின் போது, ​​மற்றொரு மாணவனுடன் கழிவறைக்கு செல்ல ஓடும்போது, ​​கட்டடத்தின் நுனியில் கால் இடறி விழுந்தமையால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பரீட்சை பாதுகாப்பு மேற்பார்வைக் கடமைகளுக்காக வந்த உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, மாணவனை தனக்கு சொந்தமான காரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

பரீட்சை எழுதும் மாணவன் என்பதனால் உடனடியாக சிசிக்சையளிக்குமாறு அதிகாரி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் உடனடியாக மாவணருக்கு சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சையின் பின்னர் மீண்டும் தேர்வு அறைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்த நிலையில் மாணவனுக்கு மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டு பரீட்சை எழுத சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மாணவனுக்கு உதவி பொலிஸ் அதிகாரிக்கு அங்கிருந்த அனைவரும் நன்றி செலுத்தியுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...