8 26 scaled
உலகம்செய்திகள்

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

Share

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தான் ஆறுதலடைந்ததாக ஒரு தந்தை கூறும் செய்தி, உண்மையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பயங்கர முகத்தை உலகம் கண்டுகொண்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களில் பலியான குழந்தைகளில் ஒன்று, அயர்லாந்தைச் சேர்ந்த தாமஸின் (Thomas Hand) குழந்தை.

தன் மகளுக்கு என்ன ஆனதோ என தான் கவலையில் இருந்தபோது, அவள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டாள் என்ற செய்தி கேட்டு, நான் ஆறுதலடைந்தேன், புன்னகைக்கக் கூட செய்தேன் என்று கூறியுள்ளார் தாமஸ். தாமஸின் மகள் பெயர் எமிலி (Emily, 8).

நான் கேட்ட ஆறுதலளிக்கும் செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் தாமஸ். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பெண்களை என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அது சாவை விட மோசமானது என்பது உங்களுக்குப் புரியும் என்கிறார் தாமஸ்.

அதாவது, தன் அழகான பெண் குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவின் கையில் சிக்கி, அவர்களால் சீரழிக்கப்படுவதைவிட, அவள் இறந்துவிட்டாள் என்று தனக்குக் கிடைத்த செய்தி தன்னை ஆறுதலடையச் செய்கிறது என்கிறார் தாமஸ்.

கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தைகளையே விடாதவர்கள், குழந்தைகளின் கைகளைக் கட்டிவைத்து, தீவைத்துக் கொளுத்தி ரசிப்பவர்கள் கையில், தன் மகள் எமிலி சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்த தாமஸுக்கு, அவளது மரணம் ஆறுதலையளித்துள்ளதில் ஆச்சரியம் இல்லையே!

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...