kodikamam
செய்திகள்இலங்கை

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

Share

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான நவர்ணன் எனும் இளைஞன் கடந்த 14ம் திகதி இரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகமுள்ளது என அவரது பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிமன்ற நீதவான் யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியினூடாக மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

மரண விசாரணைகளில் குறித்த இளைஞன் விபத்தின்போது இதயம் வெடித்தே உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...