covid cells
செய்திகள்இலங்கை

வடக்கில் 15 நாள்களில் 6,667 தொற்றாளர்கள்!

Share

வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் மன்னாரில் 10 தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 4 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவர் என கொவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் .

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வட மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 356 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Police 2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: 500 பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் அதிரடி அறிவிப்பு!

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின்...

MediaFile 8
செய்திகள்உலகம்

மதுரோவை விட மோசமான நிலையைச் சந்திப்பீர்கள்: இடைக்கால ஜனாதிபதி டெல்சிக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க...

images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி...

25 693a84d09bd08 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளை மாவட்டத்தில் கனமழை: நிலச்சரிவு அபாயம் குறித்து மாவட்டச் செயலாளர் அவசர எச்சரிக்கை!

ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...