images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

Share

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

புரூக்ளின் சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மான்ஹாட்டன் கொண்டு வரப்பட்ட மதுரோ, 92 வயது மூத்த நீதிபதி ஆல்வின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். சிறை உடையில், கைவிலங்கிடப்பட்ட நிலையில் நொண்டியபடி வந்த மதுரோ, அதிகாரிகளுடன் சிரித்துப் பேசியபடி காணப்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவைப் போதைப்பொருள் சந்தையாக மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தற்காப்புக்காக வாதிட வழக்கறிஞர்கள் எவரும் முன்வராத நிலையில், மதுரோ தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மதுரோவின் 10 பில்லியன் டொலர் (சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி) மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.

தனது தந்தையின் கைது குறித்துப் பேசிய மதுரோவின் மகன் குரேரா, கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களுடன் இருந்து கொண்டே சிலர் துரோகம் இழைத்துவிட்டனர். அந்தத் துரோகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். எனது தந்தையைக் கைது செய்த அமெரிக்காவை நாங்கள் கண்டிப்பாகப் பழிதீர்ப்போம்.”

இதற்கிடையில், திங்கட்கிழமை பதவியேற்ற இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் சமரசப் போக்கைக் கையாண்டு வருகிறார். இது மதுரோவின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...