tamilni 50 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

Share

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது.

புதுடெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்பு கடன் வழங்குனர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடமிருந்து, சாத்தியமான நிதியுதவிக்கு முன்னர், அந்த நாடுகள் தங்கள் கடன்களை மறுசீரமைப்பதாக உறுதியளிக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், பீய்ஜிங் கடன் நிவாரண கட்டமைப்பை வழங்கவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மறுப்பு இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்தநிலையில் மொராக்கோவில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாதம் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை கடன் குறைப்பு உடன்படிக்கையை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனா இந்த குழுவில் இன்னும் சேரவில்லை. ஒரு பார்வையாளராக இருந்து வருகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...