Namal 55
இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

Share

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் என்னை சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்த அநுராதபுரம் சிறைக்கு இன்று சென்று கலந்துரையாடினேன்.

அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு மறுவாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க நான் உறுதுணையாக இருப்பேன் என நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

இதனை அநுராதபுரம் சிறைக்கு சென்று சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தனது ருவிற்றர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...