2a7fc2b5 53043090909 8cdb1ae85c o 1 scaled
ஏனையவை

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

Share

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மவுசு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அவர் வரும் தேர்தலில் தோல்வியடைந்தால், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

2025இல் ரிஷி பிரதமராக இருக்கமாட்டார்
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுமானால், அதற்குப் பின் ரிஷி பிரித்தானியாவின் பிரதமராக இருக்கமாட்டார் என நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லேபர் கட்சி பிரித்தானியாவில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

அடுத்த பிரதமர் போட்டியில் 13 பேர்
இதற்கிடையில், ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் வேலை நடப்பதாகவும், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர், அவரது கட்சியினரே, உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அவ்வகையில், ரிஷிக்கு பதிலாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் முதல் நபர், கெமி பேடனாக். கட்சியில் மிகவும் பிரபலமான அமைச்சர் அவர்தான் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு அடுத்தபடியாக அடிபடும் பெயர் லிஸ் ட்ரஸ். அவரைத் தொடர்ந்து, கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகள் கொண்டவரான உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், வெளியுறவுச் செயலரான James Cleverly, Penny Mordaunt, Tom Tugendhat, Grant Shapps, Michael Gove, Priti Patel, Jacob Rees-Mogg, Gillian Keegan, Claire Coutinho, David Fros ஆகியோர் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...