4 27 scaled
உலகம்செய்திகள்

சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு; இந்தியாவுக்கு இலங்கை முக்கியத்துவம்

Share

சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு; இந்தியாவுக்கு இலங்கை முக்கியத்துவம்

இந்தியாவுக்கு முக்கியம் கொடுத்து சீன ஆய்வுக் கப்பலான ‘சியான் 6’ இலங்கையில் நிலைநிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பலான சியான் 6 (Shi Yan 6) இலங்கையில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற இந்தியாவின் கவலைக்கு இலங்கை முக்கியத்துவம் அளிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கவலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். “சில விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா சில காலமாக தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல நட்பு நாடுகளின் கருத்தைக் கேட்டேன். சில வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். பிராந்தியத்தில் அமைதியே எங்களுக்கு முக்கியம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதத்தில் சி யான் 6 எனும் சீன ஆய்வு கப்பலை இலங்கை கடற்கரையில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...