rtjy 234 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்

Share

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்

இலங்கையை விட்டு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக நீதிமன்றத்தினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள மூவரும், இலங்கை கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனையிட்ட குடிவரவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வென்னப்புவ உதசிரிகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 49 வயதான சுஜீவ பிரசன்ன பெர்னாண்டோ என்பவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு இத்தாலிக்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் கைது செயயப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு சிறிய விடுமுறைக்காக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

மேலும், மன்னார் சிலாவத்துறை நீதவான் நீதிமன்றம், நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினரால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த மூவர், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...