rtjy 233 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நிபா வைரஸ் நோய் தொடர்பில் தகவல்

Share

நிபா வைரஸ் நோய் தொடர்பில் தகவல்

இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பன்றிகளை மையமாக வைத்து நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்திற்கு சென்று, இந்நாட்டில் கால்நடை உற்பத்தி கைத்தொழில் மற்றும் பொது சுகாதாரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தபோதே வைத்தியர் ஹேமலி கொத்தலாவல இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், நிபா வைரஸ் இலங்கைக்குள் வராமல் தடுக்க நோய் கண்காணிப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது போன்று நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...