rtjy 186 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரை சந்தித்த போது ஹக்கீமின் தொடை நடுங்கியது

Share

விடுதலைப் புலிகளின் தலைவரை சந்தித்த போது ஹக்கீமின் தொடை நடுங்கியது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கண்டு தொடை நடுங்கி, கைகள் இரண்டையும் கட்டி ஹக்கீம் இருந்த இருப்புக்கள் தம்முடைய அகக்காட்சியிலே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழலில் ரவூப் ஹக்கீமை சமநிலைப்படுத்துவதற்காக தவிசாளராக இருந்த நான் அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் “அண்ணன் சிங்களப் பெரும்பான்மை உங்களை அடிமையாக்குகிறது என்பதற்காக தானே நீங்கள் ஆயுதம் தூக்கினீர்கள்?

ஆகவே மேலுமொரு தமிழ் பேரினவாதத்தை உருவெடுக்க வைத்து சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களையும் ஆயுதம் தூக்க சொல்லப் போகின்றீர்களா” என கேட்டவுடன் தான் ரவூப் ஹக்கீம் அவரது கட்டியிருந்த கையை எடுத்தார்.

அட இப்படியும் பேச முடியுமா என்று. இது ஒரு வரலாறு அதற்காக சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...