hehaliya
இலங்கைசெய்திகள்

இரு வாரங்களில் பாடசாலைகளை திறக்க தீர்மானம்!

Share

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரு வாரங்களின் பின் 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5 ஆயிரம் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதலில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மட்டும் கொண்ட பாடசாலைகள்  திறக்கப்பட்டவுள்ளன.

தற்போது கல்வித்துறை சார் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில். இதுவரை தடுப்பூசி செலுத்தாத பாடசாலை போக்குவரத்து சேவை ஊழியர்கள் விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை 15 வயதுக்கு மேற்பட்ட க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாத முற்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...