1 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

Share

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றும் கடல் வழி மார்க்கமாக ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) )என்ற திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004ம் ஆண்டு சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தது.

ஆனால் இதனை தொடர்ந்து சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைப் போல இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது செப்டம்பர் 9 மற்றும் 10 திகதியில் நடைபெற்று முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...